சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது, பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்தோடு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அடுத்து சட்டமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது அதிமுக. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு ...

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஒன்றிய அரசு பல்வேறு ...

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருக்கிறது. சுமார் 4700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இன்டர்நெட் ...

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீதான 2007ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், இடையில் வேலூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ...

அதானி நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு ராகுல் காந்தியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற ஆய்வு நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு அதானி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. குறிப்பாக அதானி நிறுவனங்களின் ...

புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் “நமது குடியரசின் மதிப்புகள்” மீதான நேரடித் தாக்குதல். இந்த கோழைத்தனமான செயலுக்கு பின்னால் பாகிஸ்தானின் சூழ்ச்சி உள்ளது. நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான ...

ஊட்டியில் ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ள நிலையில் சில தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்கவில்லை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க திருநெல்வேலியில் இருந்து உதகை சென்ற நிலையில், தனது முடிவை மாற்றி பாதியிலேயே நெல்லை நோக்கி ...

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும், முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ...

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கான மாநாடு பரபரப்பான சூழலில் இன்று (ஏப்ரல் 25) காலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடங்க இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் ...