சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் சுமார் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, சரத்குமார், CTR நிர்மல்குமார் மற்றும் பிரபு ஆகியோரின் தற்போதைய துறைகள் மாற்றப்பட்டு, ...

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கொளத்தூர் தொகுதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ...

சென்னையில் 15 நாளாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய அதிநவீன நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தலைநகர் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய கட்டட ...

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், “எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல ‘இவருக்கு பதில் இவர்’ ...

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை ...

தங்க நகைகள் இந்தியர்களின் பண்பாட்டோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான ஒரு முதலீடு. ஆனால், தங்கம் வாங்குவதும், அதனை இறக்குமதி செய்வதும் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறுகிறது. மத்திய ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய பணவீக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ...

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நாளை முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற ...

சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்கள் உண்மையிலேயே மிகவும் பாவம்; இறந்த நாய்க்குட்டி, ஆடு, மாடு போன்றவற்றை கையால் எடுத்துப் போட்டுவிட்டு, அடுத்த கணமே அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது. தூய்மைத் ...

எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என்றால் அதற்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். சட்டப்படி, எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சட்டப்பேரவையில், திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் மூத்த திமுக உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோர் தவெக அமைச்சர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாறி மாறி திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா ...