கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு,  ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார். கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் ,அதனை பலப்படுத்த ...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் ஏ.வா. வேலு பேசுகையில், சமய நல்லிணக்கம் என்பது புத்தகத்தில் எழுதப்படும் வாசகம் மட்டுமல்ல,நாம் தினசரி மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியது தான்.வீட்டிலே ...

மகளிரணி மாநாட்டில் பங்கேற்க 29 ந்தேதி கோவை வருகை தரும் முதல்வருக்கு, கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது,மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக பகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பீளமேட்டில் ...

காமராஜர் சாலை,இராமானுஜ நகரில்,சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தை,கழக மேற்கு மண்டல பொறுப்பாள,ர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி  திறந்து வைத்தார்.திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று,வாழ்த்துரை வழங்கினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி  உறுப்பினர் ...

விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பஸ்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரம் பரிசோதனை செய்ய வேண்டும் – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் ! தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் : தி.மு.க தோற்கப் போகிறது – அண்ணாமலை கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்மஸ் விழாவில் தமிழக வெற்றிக் ...

கோவையில் தி.மு.க வினர் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் (தி.மு.க, பா.ஜ.க போன்றவை) இடையே தொடர்ந்து சர்ச்சை போஸ்டர் மோதல்கள் நடந்து வந்தது, இதனால் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று பதற்றமான ...

கோவையில் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழா நடந்தது. இதில் தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அப்போது திருமண வீட்டில் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக ...

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்று பதிலளித்தார். கட்சி மாறவில்லை, பிரான்ச் மட்டுமே ...

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை செங்கோட்டையன் அண்ணா சமாதிக்கு அழைத்துச் சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன். -திருச்சியில் துரை வைகோ எம் பி பேட்டி. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ...

அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...