தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன்.இவர், தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார். இந்த நிலையில், வீடு புகுந்து தாக்கிய வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை ( ஜூலை ...
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், ...
முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று ...
ஆட்சி, அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்த தீர்ப்பை கொடுத்துள்ளனர். ஆட்சி, அதிகாரம் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க ...
ஹரியானா மாநிலம் கார்கோடாவில் ரூ.35,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சியும் நேற்று தொடங்கி வைத்தனர்.பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்தியா – ஜப்பான் வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் சனே ...
கடந்த ஆட்சிகளில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதற்காக இமெயில் முகவரியையும் அளித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவுரையின் பேரிலேயே கைதானவர்கள் இந்தப் பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் ...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த ...
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், ‘வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நமது ...












