பொன்னேரியில் தவெகவின் தெருமுனை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவதற்கு முன் அனுபவம் தேவை என உதயநிதி பேசியிருந்த பேச்சுக்கு, முதலிரவுக்கும் முன் அனுபவம் தேவையில்லை முதலமைச்சர் ஆவதற்கும் முன் அனுபவம் தேவையில்லை என தவெகவின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் பதவியை கொச்சைப்படுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ...

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் ஒவ்வொரு கட்சியினரும், தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய்யுடன் யாரும் ...

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மே 4-ஆம் தேதி வெளியாகும் நிலையில், முதல்வா் பதவி யாருக்கு என்ற போட்டி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தொடா்ந்து இருமுறை ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதுதவிர ...

இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே அதிர்ந்து போயிருப்பார்” என அமித் ஷாவைப் பார்த்து பிரியங்கா காந்தி கிண்டலாகக் கூற, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது. மத்திய அரசின் திட்டப்படி, மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் ...

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 2023-ல் நிறைவேற்றப்பட்ட “நாரி சக்தி வந்தன் அதிநியம்” சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தக் கூட்டத்தொடரில் நீக்கி, அச்சட்டத்தை 2029-க்குள் ...

தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கை குறையும் என பாஜக போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றாா் திமுக தலைவரும் முதல்வமான மு.க.ஸ்டாலின் பெரம்பலூா் மாவட்டம், ஒதியம் பிரிவுச்சாலை அருகே, திமுக வேட்பாளா்கள் சா.சி. சிவசங்கா் (குன்னம்), எஸ்.டி. ஜெயலட்சுமி (பெரம்பலூா்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), லதா பாலு ...

சென்னை: முத்ரா கடன் 2024, பிஎம்எம்ஒய் புதிய வரம்பு, மற்றும் சிறு தொழில் கடன் ஆகிய தேடல்களின் அடிப்படையில், மத்திய அரசின் இந்த முக்கியமான அறிவிப்பு குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம். இந்தியாவில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், கடன் வரம்பு தற்போது ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டதோடு, தமிழகப் பெண்களிடம் ஒரு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.எனக்காக உங்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போடுங்கள்” என்று அவர் பேசிய சில மணி நேரங்களிலேயே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்களும், பெண் ஆதரவாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.சென்னை முதல் ...

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட ...

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று (ஏப்ரல் 16) பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்படி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகப் ...