2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை ...

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என திருமாவளவன் பேசியதை இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என்று கிண்டலாக கூறியிருந்தார். இதேபோல் தவெக அமைச்சரவையில் உள்ள திருமாவளவனின் விசிக, திமுக கூட்டணியுடன் நட்புடன் உள்ளதாக கூறுவதை பலரும் கிண்டல் ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்க முதல்வர் விஜய் கரூர் வரவிருக்கிறார். சுமார் 10 கிமீ ரோடு ஷோ பயணம் செய்யும் விஜய், கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார். கடந்த ...

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ...

பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேஷியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் ...

ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ...

விசிக விருது வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் விசிக தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பெரும்​பான்மை இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக தவெக வந்​தது. திமுக கூட்​ட​ணி​யில் இணைந்து தேர்​தலை சந்​தித்​த​தால் எங்​களுக்கு மகிழ்ச்சி இல்​லாமல்​தான் இருந்​தது. தவெகவை நாங்​கள் விமர்​சித்​திருக்​கிறோம். ஆர்​எஸ்​எஸ் பெற்ற பிள்ளை ...

தமிழக மக்களை பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013-இல் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனகோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய  அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ம் ஆண்டு ...

தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...