தவெக தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 9ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.நிர்வாகக் காரணங்களால் இந்தப் பிரசாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், ...

தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு ...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாத 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏராளமான ...

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது. இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 ...

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் ” 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து ...

கோவை : தமிழக சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு வருகிற 23-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 27 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,062 இடங்களில் 3,563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் ஆணையம் ...

 ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்து கணிப்பு நடத்த அல்லது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ...

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே ...

தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை பார்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் விஜய்யின் வேட்பு மனு விவரங்களை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30 ஆம் ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் உதயநிதிக்கு இது போட்டியாக இருக்கும் என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். மேலும், திமுக அழுத்தம் கொடுத்து உங்களை வாபஸ் பெற ...