தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.ந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த விசாரணை ...
சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் எங்களுக்கு பதில் அளிக்கும்போது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நீங்கள் அவற்றையெல்லாம் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ...
வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அவரது சகோதரரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்துப் பிரச்சினை காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் மரிய குலோத், அண்ணி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு நேற்று தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே கைலாசநாதன், ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது மக்கள் ஆதரவு வெறும் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க ...
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: ஒரு உயிரின் மதிப்பை, அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை, ...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் பேசுகையில், “கடந்த 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ...
தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களிடை கவுன்சிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ...
ஈரான் விஷயத்தில் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை கருவியாக இருக்கும் ஓமான் நாட்டிற்கு மிரட்டல் விடுத்துளார் டிரம்ப், ஏற்கனவே ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஈரான் – அமெரிக்கா மத்தியில் ஜூன் மாதம் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான 60 நாட்கள் இன்றுடன் முடிகிறது.இதனால் மீண்டும் போர் துவங்குமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் டிரம்ப் மீண்டும் தனது ...










