ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக ...

நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசானது முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வையில் வெற்றித் தமிழகம் என்ற ...

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும் லட்​சக்​கணக்​கில் வைரலானது.இதன்மூலம் இளைஞர்​களைச் சென்​றடைய டிஜிட்​டல் ஊடகங்​களே மிகச் சிறந்த வழி என்​பது மீண்​டும் உறுதி ஆகி உள்​ளது. இதனால் ஆளும் ...

தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் மாண்புமிகு முதலமைச்சர் ...

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் 9312 ஒன்றான ...

நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு ...

அமெரிக்கா மற்றும் லெபனான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் ‘பிளைட் 847’ விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் லெபனானுடனான விமானச் சேவையைத் தடை செய்தார். பாதுகாப்பது காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட விமானச் சேவை, தற்போது மீண்டும் ...

சிஜேபி போராட்​டக் குழு​வினருடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு தயா​ராக உள்​ளது என்று மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் தெரி​வித்​துள்​ளார்.இதற்​கிடையே இன்று நாடு தழுவிய போராட்​டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்​துள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் ...

தமிழகத்தில் மக்களின் பெரும் ஆதரவோடு செயல்பட்டு வரும் த.வெ.க அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகியுள்ளார். காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்த எதிர்பாராத சரணடைவு மாநில அரசியலில் ...

காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் ...