நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 24) இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அப்போது தொண்டாமுத்தூரில் உள்ள அரசுமேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் சந்தானத்துக்கும் இடையே “இன்ஸ்டாகிராம் ” மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் ...

கோவை துடியலூர் கணுவாய் பக்கம் உள்ள கே .என். ஜி. புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சுமதி ( வயது 50) மகன் அடைக்கலராஜ் ( வயது 33)நேற்று இவர்கள் வீட்டில் இருந்தபோது முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் இவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தினார்கள். பின்னர் சுமதி அடைக்கலராஜ் ...

கோவை அருகே உள்ள சூலூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக சூலூர் போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் ( வயது 40) ஈரோடு ...

கோவை புதூரை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 23 )இவர் சாய்பாபா காலனி, கணபதிலே அவுட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40) இவர் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கார்த்திக் குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ...

திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.தடையை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீசார் நேற்று மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் மேடு பகுதியில் கடை ( எண் ...

கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக அருகே இ சர்வீஸ் மையம் நடத்தி வருபவர் ஈஸ்வரன் இவரது மனைவி சூர்யா( வயது 37 )நேற்று இவரது இ-சேவை மையத்துக்கு கணபதி, நல்லாம்பாளையம் ரோடு ,ரங்கா லே அவுட்டை சேர்ந்த வாசுதேவன் (வயது 66 )என்பவர் உரிமம் புதுப்பிப்பதற்காக வந்திருந்தார். அவரிடம் சூர்யா 1600 ரூபாய் ...

கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 55) இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது ...

கோவை சரவணம்பட்டி, தபால் நிலையம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர்அருண்குமார் ஆகியோர் நேற்றிரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுரை உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது 35 )தாராபுரம், ...

கோவை கிணத்துக்கடவு போலீசார் நேற்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில்நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை பதுக்கி வைத்திருந்த ஜெயராஜ் மகன் ஜோதி பொன்னு லிங்கம் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ...