கோவை போத்தனூர் அருகே நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்ட வட மாநில வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கோவை போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் வடிவு நகர் உள்ளது. இதன் பிரதான சாலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்கள் ஒருவருக்கு, ஒருவர் கற்களால் வீசி சரமாரியாக ...
கோவை சுந்தராபுரம் அண்ணா டீச்சர்ஸ் காரணியை சேர்ந்தவர் சிவகாமி சுந்தர்ராஜ் ( வயது 52) சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.சிவகாமிக்கு தோஷம் இருப்பதாகவும், பூஜை வைத்து அதை நீக்கிவிடலாம் என்று கூறினார்கள் . இதை நம்பிய சிவகாமி 4 கிராம் மோதிரம் , ...
திருப்பூர் மத்திய பகுதி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆண்டிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கறுப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில் கையில் அரிவாள் கத்தி ,இரும்பு கம்பி கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது ...
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காஜா மொய்தீன் ( வயது 45) கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் மீது ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 5க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த வீடுகளுக்கு 6 புதிய மின் இணைப்பு கேட்டு முறைப்படி விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி இருந்தார். இது தொடர்பாக ரத்தினபுரி மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்க்கும் ஹாரூணை சந்தித்து தனது வீடுகளுக்கு மின் ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காரமடை மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்ச்செல்வன் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 39 கிராம் கஞ்சா கிரீம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் கேரள மாநிலம் கண்ணூர் ...
கோவை கவுண்டம்பாளையம், மவுரியா ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சாவித்திரி ( வயது 60) இவர் நேற்று சிவானந்த காலணியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வருவதற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. ...
வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியால் பறிபோன பணம்… கோவை இளம்பெண் இன்ஜினியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி..!
கோவையை சேர்ந்த 29 வயது பெண் இன்ஜினியர் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .அவரது வாட்ஸ்அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய பெண் தான் ...
கோவை அருகே உள்ள வெள்ளானப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி ரேணுகாதேவி ( வயது 53) இவர்களது மகன் பிரதீப் (வயது 24 )இவர் திருமணம் முடிந்து இருகூர் என்.ஜிஆர். புரத்தில் வசித்து வருகிறார்.பிரபாகரன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் . நீலிக்கோணாம்பாளையத்தில் இவரது கணவருக்கு ...













