சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ...
நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம ...
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக ...
கேரளாவில் இருந்து அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசிய படி,சாலை மார்க்கமாக கூண்டு கட்டிய வாகனத்தில் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட மீன்கழிவு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு மீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள், உணவக கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து குமரி ...
தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர் சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் ஒரு மாதம் தங்குவதற்காக அறை எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நடிகை உணவு ஆர்டர் செய்ய ...
சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும் என வெளியிட்ட கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூ.60 கோடிக்கும் ...
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ‘யு டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், ...
திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு வந்த எஸ்ஐடி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கில் கைதான உன்னிகிருஷ்ணன் போத்தி, ஜெயராம் வீட்டுக்கு தங்க தகடுடன் சென்று பூஜை செய்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். தங்கத் திருட்டு ...
தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அரசு விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி ...













