ஜம்மு : இந்தியாவின் எஸ் 400 ஏவுகணை அமைப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. எஸ் 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பி வருவதாக இந்திய பாதுகாப்புத்துறை குற்றச்சாட்டு வைத்துள்ளது. ...

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், இது குறித்து பிசிசிஐ-யிடம் அவர் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். தனது மனநிலையை பிசிசிஐ-யிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ...

டெல்லி: இந்திய ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இதற்கிடையே ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் முகமது அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர்களின் விவரம் ...

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகளில் ஒதுக்க வேண்டும். அதோடு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது ...

திருச்சி புத்தூர் ஈவிஆர் சாலையில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் (மரகதம், பூரணி, தரணி) ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்விடத்தில் சிவாஜியின் வெண்கல சிலை ...

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் (69) புதிய போப் ஆண்டவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ...

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7-ம் தேதி பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் ...

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தின் துணிச்சலை போற்றும் வகையில் முதல்வர் தலைமையில் ஒற்றுமை பேரணி நடைபெற உள்ளது. ஒற்றுமை பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் பேட்டி ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த ...

புதுடெல்லி: ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு உள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போர் உச்சத்தை எட்டி உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து சைபர் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு ஏடிஎம்கள் மூடப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வௌியாகி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஏடிஎம்கள் ...