மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது ஹனூர் தாலுகாவின் மீனியம் வன மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாதேஷ்வர் கோயிலுக்கு அருகிலுள்ள மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் ஐந்து புலிகள் இறந்துள்ளன. இந்த இறப்புகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் ...
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலத்தில் அருவிகளில் நீர்வரத்து சீரானதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய மழை காரணமாக, அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நீர்வரத்து ...
சென்னை: திரைப்படத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருதில், ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல்ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் உலகம் முழுக்க சிறந்த படைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அகாடமி ஆஃப் ...
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த இலவச பயணத்துக்காக 2024- 2025 கல்வியாண்டில் ...
சென்னை: சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ...
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக ‘ஜீவா’ சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ...
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாய் கடிப்பது மட்டுமின்றி அந்த நாயால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயமும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைப் ...
வெற்றிகரமாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஆக்ஸியம் – 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறார். அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் ...
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.இதனிடையே நேற்று கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் திருமகூடலு சங்கமத்தில் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்ட்டர் பரிந்துரை செய்தார்.ஈரான்-இஸ்ரேல் போரை அவர் புத்திசாலித்தனமாக நிறுத்தியதால் இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் கார்ட்டர் தனது பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற ஒரு பரிந்துரையை உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் ...