நடு ரோட்டில் தாய் – மகனை தாக்கிய 3 திருநங்கைகள் மீது வழக்கு.

கோவை ஜூன் 24 கோவை சிவானந்தா காலனி, காந்திநகரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மனைவி அம்மாளு (வயது 40) இவர் நேற்று தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 திருநங்கைகள் இவர்களை கேலி – கிண்டல் செய்தார்களாம்.இதை தட்டி கேட்ட தாய் – மகனை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் லட்சுமி, பரிமளா, செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்.