தங்கம் வெல்ல முடியல… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்… பிரதமர் மோடி ஆறுதல்..!

காமன்வெல்த்தில் நடைபெற்ற பெண்களுக்கான (50 கிலோ) ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவின் பூஜா கெலாட் வெண்கலப்பதக்கத்தை கைப்ப்ற்றினார்.

இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பூஜா கெலாட் கூறியதாவது ; ‘எனது நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (தங்கம் வென்று) தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்… ஆனால் என் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அவற்றை சரிசெய்வேன்’ என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார் .

இது குறித்து அவர் வெளியுட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; பூஜா,நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாடப்பட வேண்டியது .மன்னிப்பு அவசியமற்றது .உங்கள் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது.உங்கள் வெற்றி எங்களை மகிழ்விக்கிறது என கூறியுள்ளார் .