காரில் கஞ்சா – போதை பொருள் கடத்திய தொழில் அதிபர் கைது.

கோவை ஜூன் 18 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணி சேகரன் ஆகியோர் நேற்று கோவை புதூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 525 கிராம் கஞ்சா 700 கிராம் உயர் ரக போதை பொருள் (மெத்தம் பெட்டமைன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பக்கம் உள்ள துப்பச்சம் பட்டியைச் சேர்ந்ததொழிலதிபர் சதீஷ்குமார் (வயது 37)என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ 2 ஆயிரம் பணம், தங்க கைச்செயின் , 2தங்க மோதிரம், ஒரு செல்போன் ,கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.