கோவை பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம். பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் -மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட இமெயில் ஐடி க்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கூட முதல்வர் அன்பு வடிவு துடியலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.