கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 62) இவரது மகன் மகாலிங்கபுரத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர் ,டி ...
திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 61 ) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதற்காக சிகிச்சை பெறுவதற்கு வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள பவித்ரா இயற்கை மருத்துவமனைக்கு கடந்த 6-ந் தேதி வந்திருந்தார். அங்குள்ள அறையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்த ...
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்குள்ள தென் திருப்பதி – நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாகடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் ...
கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள் வாலாங்குளத்தில் நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த விஸ்வா (வயது 17) பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். ...
கோவை பீளமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் நேற்று நவ இந்தியா ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர். ...
கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் அஜய் குமார் (வயது 24) லேத் தொழிலாளி. இவர் உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் ,சிவா நகர் பகுதியில் பொறித்த மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்ததால், ...
திருச்சி புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பொதுமக்கள் அந்த முனையத்திற்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வந்தார்கள். வெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து விட முடிவு செய்யப்பட்டது .நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , இன்று திருச்சிராப்பள்ளி ...
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீரின் தரத்தினை பரிசோதனை செய்யும் அரங்கினையும் பார்வையிட்டார். நிகழ்வில் ...
கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் அய்யாவு பன்னாடி வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் அலி (வயது 57)இவர் வீட்டிலிருந்து பெண்களுக்கு துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று வேலை முடிந்து கதவை பூட்டாமல் வீட்டில் தூங்கி விட்டார். அப்போது யாரோ கதவை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த செல்போன் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று ...
செங்குன்றம் அடுத்த சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சஞ்சய் வயது 19. தகப்பனார் பெயர் சிவா. கமரபாளையம் காலனி சோழவரம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவு 7.30 மணி அளவில் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வேகமாக வந்த கொள்ளையன் சஞ்சய் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் ...













