கோவை:கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் பத்ரி நாராயணன்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். .இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் டாக்டர் .கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சுந்தர வடிவேலு இடம்மாற்றம் செய்யப்பட்டு சென்னை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 24 ...

மதுரை: “தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை” என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தினேஷ் குமார். இவர் நேற்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த ரூ. 80 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான ...

சென்னை: பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக ...

புதுச்சேரி : அறுவைச் சிகிச்சையின்‌ போது மருத்துவ‌ உபகரணத்தை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009 ஆண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன் ...

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி 10வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சன்ரைஸ் பள்ளத்தாக்கில் இன்று மேலதிக சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை 6 மண்டலங்களாக பிரித்து தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது ...

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான கடன்கள் மீதான ...

நாகை: வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். இலங்கையைச் சார்ந்த பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் படகின் மீது ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அட்டுழியம் செய்துள்ளனர். ...

மூணாறு: மூணாறு அருகே நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கேரள மாநிலம், மூணாறு அருகே பருந்தும்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. நீலக்குறிஞ்சி மலர்கள், பெரும்பாலும் தென்னிந்தியாவின் சோலை வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. குறிஞ்சியில் ...

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை துவங்கிய நிலையில், பெரும்பாலும் கேரளாவுக்கே அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது.இதில் வடக்கிபாளையம்,நெகமம்,கோமங்கலம்,கோட்டூர்,சமத்தூர்,ராமபட்டினம்,கோபாலபுரம்,சூலக்கல், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பூசணி மற்றும் அரசாணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் கட்டுகின்றனர். பருவமழை மற்றும் கோடை ...