கோவை: புத்தி கிளினிக்குடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அதன் முன்னோடியான மல்டி-மோடல் மூளை, தசை மற்றும் நரம்பு தூண்டுதல் முறைகளை பெருமையுடன் அறிமுகப்படுத்துவதால், நரம்பியல் தொழில்நுட்பத்தில் ஒரு அற்புதமான முன்னேற்றம், மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உள்ளது. நினைவகம், இயக்கம் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த வகையான சிகிச்சை முறைகள் நரம்பியல், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). சென்டரிங் தொழிலாளியான இவர் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். வரதம்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது அவ்வழியே வந்த சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள குறிச்சி அவுசிங்யூனிட் பேஸ் II பகுதியில் மழலையர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 15 ஆண்டுகால பழமையான 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 சந்தன மரங்களை அடியில் இருந்து 4 அடி நீளத்துக்கு வெட்டி ...

கோவை செல்வபுரம் சௌடேஸ்வரி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2-வது மாடியில், அறைகள் எடுத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கோவை மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் ...

கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் மூதாட்டியிடம் அப்பகுதியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரமடைபோலீசில் மூதாட்டி புகார் செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்தனர். ...

கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் கடைவீதி, ஆர் எஸ் புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர் .பீளமேடு, ராமநாதபுரம் , வெரைட்டி ஹால் ரோடு ,சரவணம்பட்டி செல்வபுரம், சாய்பாபா காலனி ,உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ரத்தினபுரி ஆகிய 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இது தவிர புதிதாக சுந்தரபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் உருவாக்கப்பட்டன இந்த நிலையில் ...

விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. வாழைப்பழம், நெல் போன்றவற்றுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது, ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பிரிவினை ...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் வந்து சேர்ந்தார். நேற்று மதுரை வந்த அவர் இன்று காலை ராமநாதபுரம் நோக்கி புறப்பட்டார். மாவட்ட எல்லையான பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு தி.மு.க.-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் நகருக்குள் நேற்று  மதியம் 1 ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  தாளவாடி மலைப்பகுதியில் இருந்து பொது வினியோக திட்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் வருவாய் துறை ஊழியர்கள் ராமாபுரம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மொபட்டில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்ற போது வாகனத்தில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே  ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் ...