திருவனந்தபுரம்: பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை ஒரு கும்பல் இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தி விற்பனை செய்து வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நடத்திய விசாரணையில் கேரளாவில் மட்டும் இதுபோல 200க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், ...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தமது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்காக விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அங்கு, தனி விமான மூலம் காலை 9:30 மணியளவில் ...
சென்னை: தெலங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவில் ...
கோவை :இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் வருகிற 5- ந் தேதி (ஞாயிறு) கோவை வருகிறார்.அவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.அவர் பேரூர் அடிகளார் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மேலும் பன் நோக்கு மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தல், தொழில் முனைவோர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய ...
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக கார்த்திக் பதவி வகித்து வந்தார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை.செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் தி.மு.க .தீர்மானக் குழு செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ...
கோவைபோத்தனூரில் உள்ள தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பானுமதி ( வயது 52)சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் ,காமராஜர் ரோட்டில் உள்ள பாரதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலையில் விருதுநகர் சென்று விட்டு பஸ்சில் சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு அதிகாலை 4:30 மணிக்கு வந்தார்.அவரை பஸ் நிலையத்தில் இருந்து ...
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் துஷாந்த் ராஜ், பிரசன்னா ஆகியோருடன் சாய்பாபா காலனி என் எஸ்.ஆர்.ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவர் தனது ...
கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம், சரோஜினி ரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 54) எலக்ட்ரீசியன் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் தனது தந்தை பெயரில் இருந்த 15 சென்ட் நிலத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ 20 லட்சத்துக்கு விற்றார். அதில் ரூ 10 லட்சத்தை அவரது தாயார் மருத்துவ ...
கோவை சின்னவேடம்பட்டி,ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி சித்ரா ( வயது 47) இவர் நேற்று மாலை சின்ன வேடம்பட்டியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கலந்த 30 கிராம் செயினை பறித்தான். சித்ரா அந்த ஆசாமியுடன் போராடி 16 கிராம் நகையை இறுக ...
கோவை சாய்பாபா காலனி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் என்ற ஜாவுதீன் ( வயது 20) இவர் கத்தியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக சாய்பாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28) இவர் கஞ்சா விற்றதாக செல்வபுரம் போலீசாரால்கைது செய்யப்பட்டார். அதுபோன்று மது ...
 
		









 
				        


