இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளின் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பாகிஸ்தானிடம் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளும் கோரவில்லை என அந்நாட்டின் ...

சென்னை: திருச்சி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்; அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் ...

தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்எஸ்ஐ பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை ...

ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலைகள் உயரக்கூடும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளன.இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயருமா என்ற கேள்விக்கு, ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை நிலையாக, சமாளிக்கக் கூடியதாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது.இந்த கொந்தளிப்பை சமாளிக்க முடியும் என்று ...

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது ...

பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் விழுந்தது.தற்போது கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ...

 ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய டெபாசிட், கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 37,600 கோடி ரூபாயாக ஆக உள்ளது.சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகள் டெபாசிட், 11% அதிகரித்து 3,675 கோடி ரூபாயாக இருக்கிறதுஉலக அளவில் சுவிஸ் வங்கிகள் பிரபலமான வங்கியாக இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நாடு வழங்குகிறது. ...

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றதையடுத்து, தலைநகர்பெங்களூருவில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ...

 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.இந்த குடமுழுக்கினை தமிழில் நடத்திடக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும், ஆர்ப்பட்டம், பொதுக்கூட்டம் நடத்தியும் அரசுக்கு வலியுறுத்தின. நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் ...

‘சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: ...