கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் .இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் ...

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ...

சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால், சில வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ...

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடுபோன நகைகளை ஈஸ்வரி என்பவர் திருடியதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், ...

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்.21-ம் தேதி வரை துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ...

வாஷிங்டன்: இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. மேலும் கடனுதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அரசு அணுகியது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து சர்வதேச ...

கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய பாதிப்புகளில் வெறும் 5 மாநிலங்கள் இருந்து மட்டும் 75% க்கும் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ...

இந்தியா முழுவதுக்கும் தேவையான பம்ப் உற்பத்தியில், 90 சதவீதத்தைத் தொட்டு கோவை நகரம் சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போது, உற்பத்தியானது படிப்படியாக குறைந்து 50 சதவீதமாகிவிட்டது. இதற்கு காரணம், நாட்டின் பிற நகரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், உற்பத்தியும். இருப்பினும் பம்ப் உற்பத்தியில் கோவை வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தரத்தில் மட்டுமின்றி, சர்வதேச தரத்திலான ...

சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்திகள்: ஆளுநர் ஆர்.என். ரவி: உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தில் ...

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதில் இந்தியா முழுவதும் ...