கோவை ஜூன் 24கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிசம்பவம் நடந்தது .இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மகன் விக்னேஷ் (20) வெங்கடாசலம் மகன் ஆகாஷ் (21) ஆகியோரை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி இந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புசட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர்பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கின் குற்றவாளிகளான விக்னேஷ் ஆகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இரண்டு கொள்ளையர் மீது குண்டர் தடுப்பு சட்டம்
