கைதான்வர்களின் நகை – பணம் கையாடல் வழக்கில் மேலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.

கோவை ஜூன் 2 கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் வருண்காந்த் ( வயது 23) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் வருண் காந்த் கொடூரமாகதாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காப்பக நிர்வாகிகள் உட்பட 11 பேர் கைது செய்தனர். முன்னதாக இந்த கொலை வழக்கு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன இதில் ஒரு தனிப்படையை சேர்ந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கடந்த 28-ஆம் தேதி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து காரில் தப்பி சென்ற கவிதா, சுருதி, ஸ்ரேயா உட்பட 5 பேரை கைது செய்தனர் .இதில் கவிதா, , சுருதி, ஸ்ரேயா ஆகியோரிடம் இருந்து 18 1/2 பவுன் தங்க நகைகள் ரூ.ஒன்றரை லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பறிமுதல் செய்த நகை பணம் குறித்து சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கருவூலத்திலும் ஒப்படைக்கவில்லை. இதற்கிடையில் கைதானவர்களின் உறவினர்கள் நகை பணம் குறித்து போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் நகை பணத்தை அவர் கையாடல் செய்தது தெரிய வந்தது .இதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். .இந்த நிலையில் கைதான சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்கையாடல் செய்த பணத்தில் ரூ.50 ஆயிரத்தை தனது தலைமையிலான தனிப்படையில் இடம் பெற்ற மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜாவிடம் கொடுத்ததாக தெரிவித்தார் ..இதை தொடர்ந்து கோவை சரக டி.ஐ. ஜி. மனநலம் பாதித்த வாலிபர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை பணத்தை கையாடல்செய்த சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரிடம் பணம் வாங்கிய மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட் )செய்து உத்தரவிட்டார் ..இந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.