அதிமுக பொதுக்குழு வழக்கு: மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.!!

திமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று விசாரித்தார். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக கூறிய நிலையில் வழக்கின் விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.