தற்போதைய மன்னர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியாவின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெயினின் அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்டாம் இசபெல்லாவுக்குப் பிறகு லியோனர் ஸ்பெயினின் மகாராணியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, ஸ்பெயினின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்பன்’ (House of Bourbon) வம்சத்தின் வசம் உள்ளது. பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு, 1975-ல் முதலாம் ஜுவான் கார்லோஸ் தலைமையில் முடியாட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
அவர் 2014-ல் தனது மகன் ஆறாம் பிலிப்புக்காக தனது பதவியைத் துறந்தார். மன்னர் பிலிப் 2004-ல் பத்திரிகையாளரான லெட்டிசியாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு லியோனர் உட்பட இரு மகள்கள் உள்ளனர்.





