ஆடு மேய்க்க சென்ற 65 வயது மூதாட்டியைதூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை.

கோவை ஜூன் 4கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 42)இவர் கடந்த 26- 6 -20 22 அன்று காலை 9 மணிக்கு ஆடுமேய்க்க சென்றஅதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று ராம் நகர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது .இதற்கு மறுப்பு தெரிவித்த முதாட்டியை தாக்கி காயப்படுத்தினார் .சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இதனைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்ய து .இவ்வழக்கின் விசாரணை எஸ்.சி – எஸ்.டி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இவ்வழக்கின் விசாரணை நேற்று ( செவ்வாய்)முடிவு பெற்று குற்றவாளி வேலுசாமிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிவிவேகானந்தன் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்.