கோவை ஜூன் 2 திருப்பூரை சேர்ந்தவர்கள் வசந்தாதேவி, கீதா இவர்கள் இருவரும்,சிங்காநல்லூர் , நீலி கோணாம் பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று கோவைக்கு வந்தனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சிங்காநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் செல்வதற்கு ரெயில்வே தண்டவாளத்தில்நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து அந்த வழியாக வந்த ரெயில் வசந்தா தேவி மற்றும் கீதா ஆகியோர் மீது மோதியது .இதில் வசந்தா தேவி அதே இடத்தில் இறந்தார்.படுகாயம் அடைந்த கீதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .இது குறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு வந்த பெண் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு.
