கோவை மே 9கோவை காளப்பட்டியில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 58) இவர் நேற்று கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் செந்தில்வேல் முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த வேன் டிரைவர் பினு ( வயது 55) என்பவர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேன்மோதி ரோட்டில் நடந்து சென்றவர் உயிரிழப்பு.
