கோவை ஜூன் 12 கோவை அருகே உள்ள வடவள்ளி வி. கே. எஸ் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் ( வயது 42 )இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவரது மனைவி சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அரி கிருஷ்ணன் மட்டும் வடவள்ளி வி. கே .எஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இவர் காந்திபுரத்தில் மருந்து விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்காக கடன் வாங்கி இருந்தார்..இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை இவரது வீட்டின் மாடியில் வசிக்கும் ரேவதி என்பவர்அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.. இது குறித்து வடவள்ளி போலீசில்புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அரி கிருஷ்ணன்அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. -அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்.
