ரவுடி மாமூல் கேட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்..!

ரவுடி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

நேற்று முன் தினம் 18.4.2023 இரவு 7.30 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ரவுடிகள், தகராறில் ஈடுபட்டு பெட்ரோல் பங்க்கில் இருந்த அமல்ராஜ் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ரவுடிகள், திருவாரூர் பெரிய காரணியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ராஜி மற்றும் S.  சுந்தரம் என்பவரின் மகன் புருஷோத்தமன் என்கின்ற இரு நபர்களும் பைக்குக்கு பெட்ரோல் போடும் படி கேட்டனர் .

ஊழியர் அமல்ராஜ் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதற்கு ”என்னிடமே பணம் கேட்கிறாயா” என்று அம்லராஜை அடித்து தாக்கியுள்ளனர்..