கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஒருவர் ஆடு வளர்க்கும்
பட்டி போட்டு இருந்தார் அங்கு வேலை செய்து வந்த ரவி உட்பட 2பேர் அந்த பட்டியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டு காளப்பட்டி ரோட்டில் சென்றனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆடுகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் 12 ஆடுகள் அதே இடத்தில் இறந்தன. ஆட்டை மேய்த்துச் சென்ற ரவி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மாநகர கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் காரை ஓட்டி சென்றவர் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது .ஆடுகள் பலியானதும் பயந்து போன அந்த சிறுவன் காரை நிறுத்தாமல் சென்று விட்டதும் தெரிய வந்தது.. இதை யடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர். மாஜிஸ் திரேட் அந்த சிறுவனை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டதுடன் , ஒரு மாதம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தவும் உத்தரவிட்டார் இதையடுத்து அந்த சிறுவன் கோவை மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .அத்துடன் இந்த சம்பவத்தில் சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவரது உறவினர் மற்றும் அந்த காரின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்கள் தலை மறைவாக உள்ளனர்.அவர்களை போலீசார்
தேடி வருகிறார்கள்.
கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் இறந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி.
