சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் 6 ஆண்டு விசாரணைக்கு பிறகு காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டனர்.பின்னர் சிபிஜ. விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,எஸ்.ஐ ரகு கணேஷை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் தலைமைக் காவலர் முத்துராஜை,உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரும் தற்போது மதுரை சிறையில் உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்









