நவம்பர் 5-ம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!

சென்னை: தமிழக அரசு வழி​காட்​டு​தல்​களை அறி​வித்த பின்​னர் விஜய்​யின் சுற்​றுப்​பயணத்தை தொடங்​க​வும், அதற்கு முன்பு நவ.

5-ம் தேதி சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்​த​வும் தவெக நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் துயரச் சம்​பவத்​தால் முடங்​கிய நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் தற்​போது மீண்​டும் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது. உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பங்​களை கடந்த 27-ம் தேதி மாமல்​லபுரத்​தில் சந்​தித்து ஆறு​தல் கூறிய விஜய், அடுத்​தகட்ட அரசி​யல் நகர்​வு​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கட்​சி​யின் தினசரிப் பணி​களை ஒருங்​கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்​வாகக் குழுவை தவெக தலை​வர் விஜய் நியமித்​துள்​ளார். நிர்​வாகக் குழுக் கூட்​டம் சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. பொதுச் செய​லா​ளர் என்​. ஆனந்த் தலைமை வகித்​தார்.

தேர்​தல் பிரச்​சார மேலாண்​மைப் பிரிவு பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, இணைப் பொதுச் செய​லா​ளர் சிடிஆர்​.நிர்​மல்​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். இதில், கரூர் சம்​பவம் குறித்த விசா​ரணை, சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் நடத்​து​வது உள்ளிட்​டவை குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. மேலும், தமிழக அரசு வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்ட பின்​னர் விஜய்​யின் சுற்​றுப் பயணத்தை தொடங்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக வெற்​றிக் கழகத்​தின் படைக்​கலன்​களாக நீங்​கள் இருக்​கை​யில், நம்​மைக் காக்​கும் கவச​மாக மக்​கள் இருக்​கை​யில், அவர்​களு​டன் நமக்​குள்ள உறவை​யும், அவர்​களின் குரலாகத் தொடரும் நம் வெற்​றிப் பயணத்தையும் எவராலும் தடுக்க இயலாது. சூழ்ச்​சிகளாலும், சூதுகளாலும் நம்மை வென்​று​விடலாம் என்று கனவு காணும் எதிரி​களும் இதை உணர்ந்தே உள்​ளனர்.

நமது அடுத்த அடியை இன்​னும் நிதான​மாக​வும், தீர்க்​க​மாக​வும் நாம் எடுத்​து​வைக்க வேண்​டும். இத்​தகைய சூழலில் கட்​சி​யின் அடுத்​தகட்ட செயல்​பாடு​கள் குறித்து விவா​திக்க வேண்​டும். இவை குறித்து முடிவு​கள் எடுக்​கும் பொருட்டு பொதுக்​குழு​வின் சிறப்​புக் கூட்​டத்தை கூட்ட முடிவு செய்​துள்​ளோம்.

அதன்​படி, தவெக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் நவம்​பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடை​பெற உள்​ளது. வாருங்​கள் சிறப்​புப் பொதுக்​குழு​வில் கூடு​வோம். வருங்​காலம் நமதென்று காட்ட தீர்க்​க​மாகத் திட்​ட​மிடு​வோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது..