கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்அருகே உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவருக்கு 45 வயது இருக்கும். அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்..
