50% வரி தான்… இந்தியாவுடன் விரிசல் – டிரம்ப் ஒப்புதல்..!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்று முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியா மீது கூடுதலாக அமெரிக்கா வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டிய நிலையில், இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இது குறித்து பேசுகையில், ‘இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விஷயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அதை செய்தேன். நிறைய செய்து விட்டேன்’ எனக் கூறினார். இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான் நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.