போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்:அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

மெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத் தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் என்று ஈரானிய மூத்த அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க வீரர்களை ஈரானிய மண்ணில் அடக்கம் செய்யும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி அறிவித்தார்.ஈரானின் அணுசக்தி திட்டத்தை அகற்றும் நடவடிக்கையில் அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்துவதைப் பற்றி குறிப்பிடுகையில், B-2 விமானங்களுடன் போதுமான எண்ணிக்கையிலான சவப்பெட்டிகளையும் உங்களுடன் கொண்டு வாருங்கள் என ரெசாய் எச்சரித்துள்ளார்:இந்த சமீபத்திய நகர்வுகள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தலையிட முடிவு செய்தால் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈரானிய அதிகாரிகள் முன்னர் சபதம் செய்திருந்தனர்.பேச்சுவார்த்தையின் நடுவே வெளியேறியது அமெரிக்கா மட்டுமே என குறிப்பிட்டுள்ள ஈரான், எதிரி கணக்கீடுகளுக்கு அப்பால் கடுமையான பதிலடி உறுதி என்றும் மிரட்டல் விடுத்திருந்தது.இந்த நிலையில், பதட்டத்தை தணிக்கும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவிக்கையில், அமெரிக்கா ஈரானுடன் போரை நாடவில்லை என்றும், தாக்குதல்கள் ஈரானிய வீரர்களையோ அல்லது பொதுமக்களையோ குறிவைக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்க முயன்றார்.இதனிடையே, இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். ஈரான் தற்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.உண்மையில் இந்த மோதலுக்கு காரணம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பதை ட்ரம்ப் தமது குழப்பமான அறிக்கைகளால் மறைக்க முயல்கிறார் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் ட்ரம்பிற்கு பதிலளித்துள்ள ஈரான், ஒன்பது நாள் தாக்குதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் அமெரிக்கா எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத நாடு என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான இந்த மோதலுக்கு முழு காரணமும் அமெரிக்கா மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இந்த விவகாரத்தில் பதிலடி உறுதி என்றே ஈரான் தொடர்பில் நன்கறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.