கோவை ஜூன் 21கோவை , ராமநாதபுரம் புலியகுளம் , பெரியார் நகரை சேர்ந்தவர் பழனியப்பன் . இவரது மகன் கேசவன் ( வயது 19) இவர் நேற்றுகுனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்ததனது நண்பர் சஞ்சய் (வயது 20 )என்பவருடன் ஸ்கூட்டரில் சுங்கம் – உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி பின்னால் இருந்த கேசவன் கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற சஞ்சய் மீது போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து வாலிபர்சாவு.நண்பர் மீது வழக்கு.
