கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் அங்குள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ்முந்தா மோனிகா தேவி ஆகியோரின் நான்கு வயது மகள் குடியிருப்பு முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து குழந்தை ரோசினியை கல்வி தேயிலை தோட்டத்தில் சென்று மறைந்துள்ளது கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தையின் தாய் அலறியடித்து கதறி அழுதுள்ளார் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்களும் தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரும் இணைந்து அந்த தேயிலைத் தோட்டத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது