கோவை மாவட்டம் வால்பாறையில் விடிவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்தது இந்நிலையில் இன்று காலை வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்று பொங்கலின் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் இதேபோல ஆழியாறு சொதனைச்சாவடி அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதனையும் நெடுஞ்சாலை துறையினர் துரித நடவடிக்கையால் அப்புறப்படுத்தினர்மேலும் கனமழையின் காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
வால்பாறையில் பெய்த கனமழையால் 16 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு துரித நடவடிக்கையால் போக்குவரத்தை சீர் செய்ய நெடுஞ்சாலை துறையினர்
