கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அடைந்தமோகன்ராஜ் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கதிர்வேல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
டிராவல்ஸ் நிறுவன அதிபர் தற்கொலை .
