முதியோர் இல்லத்தில் 2 மூதாட்டிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.போலீஸ் விசாரணை.

கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில வினாடிகளில் உயிரிழந்தார். அவர்கள் 2 பேருமே உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தனர் என்றாலும் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்ததால்சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில்புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.