காரில் தவறவிட்ட 10 பவுன் தங்க செயின் – பணத்தை திருப்பி கொடுத்த டாக்சி டிரைவருக்கு கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு

கோவை ஜூன் 7 கரூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மதுமிதா ( வயது 34 ) இவர் கோவையில் கால் டாக்சி ஒன்றில் புக் செய்துள்ளார். பின்னர் டாக்சியில் ஏறிய நிலையில் புக்கிங் கேன்சல் செய்துள்ளார். அப்போது அவரது 10 பவுன் தங்க செயின் மற்றும் ரூ 10 ஆயிரத்தை டாக்சியில் தவறவிட்டு சென்றுவிட்டார். பின்னர் டாக்சி டிரைவர் சம்பத் குமாருக்கு திருச்சி செல்ல டாக்சி புக்கிங் ஆனது. இதை யடுத்து அவர் திருச்சி விட்டார். .இந்த நிலையில் மதுமிதா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் தனது 10 பவுன் நகை ரூ 10 ஆயிரம் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் திருச்சி சென்றிருந்த டாக்சி டிரைவர் சம்பத்குமார் கோவை வந்தவுடன் மதுமிதா தவறவிட்ட செயின் மற்றும் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார் .இதை யடுத்து டாக்சி டிரைவர் சம்பத்குமார் நேர்மையே மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்..