தொழில் நஷ்டம்.தூக்கில் வியாபாரி தற்கொலை .

கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் காந்திநகர்,பார்பர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 )பாக்கு வியாபாரி .இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.ரமேஷுக்கு பாக்குவியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துமனைவி சிலம்பு செல்வி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.