கோவை மே 20 அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஸ்கர் அலி (வயது 19) இவர்காரமடையில் உள்ள கிரீஷ்குமார் தோட்டத்தில் உள்ளதேங்காய் தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது காலில் பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக காரமடையில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது சப் இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாம்பு கடித்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.
