சத்தியமங்கலத்தில் பணம் வைத்த சூதாடிய 7 பேர் கைது – பணம் ரூ.31,600 பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிவா (45),  மோகன் (34), தங்கராஜ் (40), ஜமேஷ்(50), பாஸ்கர் (40), விஜயகுமார் (40), சுரேஷ்(42) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், பணம் ரூ. 31,600.  சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.