கோவையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை அறவே இல்லாது ஒழிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று பீளமேடு பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு காருடன் நின்று கொண்டிருந்த 4 மாணவர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1,250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 கார்கள், 1250கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இவர்கள் ஈரோடு மாவட்டம் ஓலப மோளபாளையம், அசோக் நகரை சேர்ந்த கிருஷ்ணா ( வயது 21) மோளப்பாளையம் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்த மிதுன் ரோஷன் ( வயது 21) விஷால் (வயது 20) ஈரோடு மாவட்டம் இடையன் காட்டுவலசு ஆதிஷ் ( வயது 23) என்பது தெரியவந்தது.இவர்கள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இதே போல கொடிசியா ரோட்டில் உள்ளபொதுக் கழிப்பிடம் அருகே சந்தேக படும்நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடமும் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் , திண்டல் சின்ன செங்கோடம்பாளையம் ஜிதிஸ் ( வயது 19) பெருந்துறைகாஞ்சி கோவில், காந்தி நகரை சேர்ந்த மேகநாத் ( வயது 19) சூர்யா ( வயது 21) வினின் ( வயது 21) என்பது தெரிய வந்தது. இவர்களும் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.