ரயிலில் 55 கிலோ கஞ்சா கடத்தல்..!

மேற்கு வங்காளம் , பீகார், அசாம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கோவை ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் கோவையில் போலீசார் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்யும் பெட்டியில் 3 நபர்கள் சந்தேகப்படும்படி இருந்தனர். உடனே போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாலஸ் மொண்டல் (வயது 24) மிதுன் சர்க்கார் ( வயது 26 )ரோஹித் தாஸ் (வயது 25) என்பது தெரிய வந்தது .தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது . இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான 3 பேரும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.