கோவையில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 50 சின்னங்கள்ஒதுக்கீடு.!!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&-ந் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல்
கோவை மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 நகராட்சிகளில் 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2312 வாக்குச் சாவடிகளுடன் தேர்தல் நடைபெறுகிறது.
50 சின்னங்கள்
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்தநிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான சுயேச்சை சின்னங்களின் மாதிரிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில் 50 சின்னங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த சின்னங்களின் மாதிரிகளை வேட்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளன.
கேக்
அதில் கிதார் (இசைக்கருவி), பேட்ஜ் (அடையாளக்குறி), ஸ்பேனர் (மறை திருக்கி), வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, நாற்காலி, புட்டி பாட்டில், மக்கு (நீளக்குவளை), ரோடு ரோலர், பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேற்சட்டை (கோட்), கோப்புகள் அடுக்கும் அலமாரி, முள் கரண்டி (ஸ்போர்க் ஸ்பூன்), கொதி கெண்டி (கேத்தில்), ஆக்கி மட்டையும், பந்தும், மகளிர் பணப்பை, மேசை விளக்கு, ஊதும் இசைக்கருவி.
கைப்பை, தீப்பட்டி, கழுத்தில் கட்டும் டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கன் விளக்கு, கரண்டி, தண்ணீர் குழாய், வாக்கிங் ஸ்டிக், மட்டையாளர், மணி, பாலம், கேக், கால்குலேட்டர்.
குலுக்கல் முறை
கேமரா, கேரட், கிரிகெட் ஸ்டம்ப், டீசல் பம்ப், தபால் உறை, வறுசட்டி, ஐஸ் கிரிம், ரம்பம், தேய்ப்பு பெட்டி, மிக்சி, பிரஷர் குக்கர், கூடாரம், கோடாரி, கண்ணாடி டம்ளர், விசில் ஆகிய 50 சின்னங்கள் இடம்பெற்று உள்ளன.
வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடும்போது சுயேச்சை வேட்பாளர்களுக்கு இவற்றில் இருந்து சின்னங்கள் ஒதுக்கப்படும், ஒரே சின்னத்தை 2 சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.