கோவை ஜூன் 6கோவை மாநகரில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சிலர் பல்வேறு முறைகளில் ஈடுபடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் போலீசார் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் வடவள்ளி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் மணிகண்டன், செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் வடிவேலு, போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு கபூர், போலீஸ்காரர் வினோத் , வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்ட நபர்களிடம் லஞ்சம் வாங்கியது, சரக்கு வாகனங்களில் பணம் வசூலித்தது, பல்வேறு வழக்குகளில் புகார் தாரர்களிடம் லஞ்ச தொகையை பெற்றது மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு உடனடியாக இருந்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவை மாநகர காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
கோவையில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 5போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்.கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை.
