சேவல் சண்டை சூதாட்டம் 4 பேர் கைது .

கோவை ஜூன் 19 கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னிப்பாளையம் சுமைதாங்கி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள பொங்கலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 50) மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகர் சந்தோஷ் (வயது18) புஞ்சை புளியம்பட்டி சுதர்சன் (வயது 19) தரணிதரன் (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கணேச மூர்த்தி, சிவா ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்களிடமிருந்து 3சேவல் , ரூ 2,160 பணம், 2பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கணேசமூர்த்தி, சிவா ஆகியோரை தேடி வருகிறார்கள்.