கோவை ஜூன் 14
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டகாவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில்சம்மந்தப்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 3 கனரக வாகனங்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 32 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ? அதே நிலையில் வருகின்ற 18 – ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் . வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 32வாகனங்கள் பொது ஏலம்.
