2 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- தந்தை, மகன் பலி..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 55 )இவரது மகன் கோபால் (வயது 28)இருவரும் நேற்று உடுமலை- பல்லடம் ரோட்டில் மினிவேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மகன் கோபால் ஓட்டினார் .சின்ன புத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பிக்அப்வேனும் இவர்கள் சென்ற மினிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக் காமல் கோபால் அவரது தந்தை பண்ணாரி ஆகியோர் இறந்தனர்.மற்றொரு வேன் ஒட்டி வந்த அருள்பிரசாத் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுல்த்தான்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக மற்றொரு வேன் ஓட்டி வந்த சூலூர் சேர்ந்த அருள் பிரசாத் ( வயது 23 ) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.