டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை .2 ஊழியர்கள் கைது.

கோவை ஜூன் 4 கோவை ஆர். எஸ். புரம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ரமேஷ் ராஜா ( வயது 28)கைது செய்யப்பட்டார்.36 மது பாட்டில்களும் , மது விற்ற பணம் ரூ 6.390 பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில்சட்ட விரோதமாக மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் ராஜா (வயது 46)கைது செய்யப்பட்டார். 30மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.