2 பைக்குகள் நேருக்கு நேர்மோதல் .வாலிபர் உயிரிழப்பு.

கோவை ஜூன் 4தஞ்சைமாவட்டம், மடுகூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் . இவரது மகன் பிரனேஷ் ( வயது 20 )இவர் நேற்று கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது .இதில் பிரனேஷ் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் இது தொடர்பாக மற்றொரு பைக் ஓட்டி வந்த ஆர் .எஸ் . புரம். ராமலிங்க நகரை சேர்ந்த கண்ணன் ( வயது 50 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..